மீன்வள பட்டப்படிப்பு படித்த மாணவி ரம்யவீணா 13 பதக்கங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வேளாங்கண்ணி தனியார் ஓட்டலில் தங்கயிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று காலை குடும்பத்துடன் வேளாங்கண்ணி பேராலயம் சென்றார். பின்னர் அங்கு நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றார். தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடந்த நாகூரில் உள்ள பல்லைக்கழகத்துக்கு காரில் சென்றார். கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜா தலைமையிலான நிர்வாகிகள், விசிக மாவட்ட செயலாளர் பேரறிவாளன் தலைமையிலான நிர்வாகிகள் புத்தூர் ரவுண்டானா அருகே கருப்பு கொடி காட்ட நேற்று காலை திரண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 15 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.