தகவலறிந்து திருவான்மியூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகளவில் புகை சூழ்ந்ததால், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. சுற்று வட்டார பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், கடையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் குறித்து வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.