ஸ்ஸ்ஸ்ப்பா… என்ன வெயில் ஏசி காத்துடன் கல்யாண ஊர்வலம்: ஒன்றரை கி.மீ. தூரம் வைக்கப்பட்ட ஏர் கூலர்கள்

மத்தியபிரதேசம் இந்தூரின் ராஜ்வாடா பகுதியில் சுதன்ஷு ரகுவன்ஷி என்பவர் பிரபலமான உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்துக்கு 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாரம்பரிய நாட்டிய ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்தியபிரதேசத்திலும் தற்போது கடும் கோடை வெப்பம் மக்களை வாட்டி வருகிறது. இதனால் திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்ட உறவினர்களையும், நாட்டியமாடுவோரையும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க சுதன்ஷு பிரத்யேக ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி, ஊர்வலம் முழுவதும் 11 போர்டபிள் ஏர் கூலர்களை தள்ளுவண்டிகளில் எடுத்து சென்று உறவினர்களையும், நாட்டியக் குழுவினரையும் வெப்பம் தாக்காமல் குளிர்வித்துள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலரது பாராட்டையும், வாழ்த்தையும் பெற்று வருகிறது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்