நாமக்கல்: லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிடக் கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தன்ராஜ் உள்ளிட்டோர் டிஜிபியிடம் மனு அளித்தனர். நெடுஞ்சாலை கொள்ளைச் சம்பவங்களை தடுக்க கூடுதல் காவலர்கள் ரோந்து மேற்கொள்ளவும் வலியுறுத்தினர்.