மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் இட நெருக்கடியுடன் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேலவளம்பேட்டை பகுதி சென்னை திருச்சி மார்க்கமாக சென்று கொண்டிருந்த கார் முன்னே சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க தேசிய நெடுஞ்சாலை மையத்தில் நின்றதால் அதனை பின் தொடர்ந்து வந்த அரசு பேருந்து மோதியது.
இந்தப் பேருந்தை பின்தொடர்ந்து வந்த கார் மற்றொரு பேருந்து அதனைத் தொடர்ந்து வந்த கார் என அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் தொடர் சங்கிலி விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு சிலர் மட்டுமே லேசான காயம் அடைந்தனர். இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.