சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வல வாகனத்தில் உள்ள பிரேமலதா ஒலிபெருக்கியில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாகனம் செல்ல ஒத்துழைப்பு தரும்படி ஒலிபெருக்கியில் தொண்டர்களுக்கு பிரேமலதா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பகுதியை கடந்து செல்கிறது.