இதனையடுத்து போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை சேசிங் செய்தனர். ஒரு கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர் அல்ல சுமார் 45 கிலோ மீட்டர் துரத்தி சென்று கண்டெய்னர் லாரியை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் ஓட்டுநர் லாரியை விட்டு தப்பி ஓடினார். கண்டெய்னர் லாரியை போலீசார் சோதனை செய்ததில் காலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், லாரி ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில் பயத்தினாலேயே லாரியை வேகமாக ஓட்டி சென்றதாக கூறினார். திரைப்பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு சேசிங் செய்து பிடித்தும் கண்டெய்னர் லாரி காலியாக இருந்ததால் ஆந்திர போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.