இதையடுத்து அந்த பையை சோதனை செய்தபோது ஐம்பொன்னால் ஆன முருகர் சிலை, ஒரு அடி உயரம் கொண்ட வள்ளி, தெய்வானை ஆகிய சிலைகளை வைத்திருந்தார்.இதையடுத்து அவர்களை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த இர்ஷித் முகமத் (48), கே.கே நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35), டிபி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் எபினேசர் (30) என்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சிலை அனைத்தும் 150 ஆண்டுகளுக்கு மேலானது என்பதும் தெரியவந்துள்ளது.