அந்த வகையில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும், சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்ற வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் நிர்வாகத்தால் தொடரப்பட்ட வழக்கில் வேதாரண்யம் வட்டம், அகஸ்தியம்பள்ளி கிராமத்தில் கட்டுப்பட்ட 2122.10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களுக்கு தமிழ்நாடு சிறு இனாம் (ஒழிப்பு மற்றும் இரயத்துவாரியாக மாற்றல்) சட்டம் 1963 பிரிவு 8(2)ன் படி வேதாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் பட்டா பெற முழு தகுதியுடையவராகிறார் என சென்னை உதவி நிலவரித்திட்ட (வடக்கு) அலுவலரால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பின் அடிப்படையில் இந்நிலங்களுக்கு பட்டா பெற நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருக்கு திருக்கோயில் செயல் அலுவலரால் விண்ணப்பிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு திருக்கோயிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு திருக்கோயில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டுள்ளது.