நாகை: வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் நாட்டு வெடிதயாரிக்கும் கட்டடத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.