இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். தர்மபுரியில் நேற்று நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ‘கடந்த 10 ஆண்டு காலம் பாமக ேதசிய ஜனநாயக கூட்டணியில் டெல்லியில் ஒரு அங்கமாக இருக்கிறது. நாம் எங்கும் செல்லவில்லை. இங்கேயே தான் இருக்கிறோம். ஆனால் ஒரு சிலர் நம்மை வேடந்தாங்கல் பறவை என்கிறார்கள். அங்கே செல்கிறோம். இங்கே செல்கிறோம் என்று விமர்சிக்கின்றனர். நாங்கள் வேடந்தாங்கல் பறவை கிடையாது. பறவைகளின் சரணாலயம்தான் வேடந்தாங்கல். நம்மிடம் வருபவர்களுக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். அவர்களுக்காக உழைப்போம். வெற்றி பெற வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம். எங்களுடைய வளர்ப்பு அப்படி,’’ என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி கொடுத்துள்ள பதிலடி தேர்தல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.