விசிக மது ஒழிப்பு மாநாடு: எடப்பாடி முடிவு செய்வார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ராமநாதபுரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக கலந்து கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுகவிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை மரியாதைக்குரிய அழைப்பாகவே கருதுகிறோம். இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்’ என்றார்.

Related posts

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் வலசை வரும் பறவைகளை கண்டுகளிக்க 2 தொலை நோக்கியுடன் மரப்பாலக் கூண்டு

பண்ருட்டியில் காடுவெட்டி குரு மகனை தடுத்து நிறுத்திய பாமகவினர்; காவல் துறையுடன் வாக்குவாதம்