வேப்பூர் அருகே கோயில் விழாவில் நாட்டு வெடி வெடித்து ஒருவர் உயிரிழப்பு..!!

கடலூர்: வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் கோயில் விழாவில் நாட்டு வெடிகள் வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவராத்திரியை ஒட்டி கோயிலின் அருகே சிறுவர்கள் பட்டாசு வெடித்தபோது அதில் இருந்து தீப்பொறி விழுந்துள்ளது. பெரியசாமி என்பவர் வைத்திருந்த நாட்டு வெடிகள் மீது தீப்பொறி விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் பெரியசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார். வெடி விபத்தில் காயமடைந்த ராமலிங்கம் என்பவர் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ.. ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தரவுகள்: இதை பயன்படுத்துவது எப்படி? இதில் என்ன செய்யலாம்?