வயநாடு : வயநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அமைச்சர்களிடம் பேசவுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு குறித்து செய்தி வெளியிட்ட அவர், “நிலச்சரிவில் சிக்கி அன்புக்குரியவர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அனைத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி மீட்புப் பணிகளை செய்ய முதல்வரிடம் கோரினேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் அளித்துள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார்.