வத்தலக்குண்டு, மே 18: தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 நாள பயணமாக கொடைக்கானல் வந்தார்.அவர் வருவதை யொட்டி வத்தலக்குண்டு மதுரைச்சாலையில் உள்ள 2 தனியார் பள்ளிகள் முன்பிருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் கொடைக்கானலில் இருந்து திரும்பி சென்னை சென்று விட்டார். ஆனால் வேகத்தடைகள் நேற்று வரை மீண்டும் அமைக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக இடித்த வேக தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.