பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு

சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் அப்துல் சமது எம்எல்ஏ ஆகியோர் நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன் குமார் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதே போல ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மக்கள் விடுதலை கட்சி நிறுவனத் தலைவர் முருகவேல்ராஜன், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாகவும், இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் என்றும் உறுதி அளித்தனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு