இதே போல ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மக்கள் விடுதலை கட்சி நிறுவனத் தலைவர் முருகவேல்ராஜன், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாகவும், இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் என்றும் உறுதி அளித்தனர்.