சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முறையாக அமல்படுத்தி நியாயம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி ரவிக்குமார், ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் அருணாச்சலம், வெங்கடேசன், ஓய்வு பெற்ற மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி குணசேகரன், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகி வாசுதேவன் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் கணபதி பேசினார். முடிவில், சங்கத்தின் மாநில பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.