ரயில் எண் 19168, சபர்மதி எக்ஸ்பிரஸ், கான்பூர் மற்றும் பீம்சென் நிலையங்களுக்கு இடையே ஒரு தடுப்பு பிரிவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ஓட்டுநரின் கூற்றுப்படி, பாறாங்கல் என்ஜின் மீது மோதியது, இதன் காரணமாக இன்ஜினின் கால்நடை பாதுகாப்பு மோசமாக சேதமடைந்தது என தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் விபத்தில் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என கிடைத்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த விபத்து அதிகாலை 3 மணியளவில் நடந்தது. தற்போது, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த அனைவரும் விபத்து நடந்த இடத்தில் இருந்து கான்பூர் ரயில்வேக்கு பேருந்தில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும் ரயில் விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது; “தண்டவாளத்தின் குறுக்கே இருந்த அடையாளம் தெரியாத பொருளின் மீது ரயில் மோதி, இன்று அதிகாலை தடம் புரண்டுள்ளது.
பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.சம்பவ இடத்தில் சான்றுகள் சரிபார்க்கப்படுகின்றன. IB மற்றும் உபி போலீசார் விசாரணை பணியில் ஈடுபட்டுள்ளனர்” என ரயில்வே அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.