சென்னை: ஒன்றிய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நடப்பு கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும். நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகுதான் வன்னியர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். நீங்கள் எந்த கூட்டணியில் உள்ளீர்களோ அவர்களிடம் பேசி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் வன்னியர் இடஒதுக்கீடு செய்யப்படும். வன்னியர் 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.