சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: வன்னியர் சங்கம், வரும் 20ம் நாள் 45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வன்னியர் இட ஒதுக்கீடு என்ற இலக்கை வென்றெடுப்பதற்கான எஞ்சிய பயணமும் இனிமையானதாக இருக்காது. போராடி சமூகநீதியை வென்றெடுக்க வேண்டியுள்ளது. இட ஒதுக்கீடு கோரி தொடங்கிய சமூக நீதிப் போராட்டத்தில், ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதற்கு முன்பு எத்தகைய நிலையில் நாம் இருந்தோமோ, அதே போன்ற சூழலில் தான் நாம் இப்போதும் இருக்கிறோம். அப்போது நடத்தப்பட்டதை விட மிகப்பெரிய சமூகநீதிப் போரை நாம் நடத்தியாக வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக வேண்டும்.