வாணியம்பாடி அருகே நள்ளிரவு பைக் மீது கார் மோதல்: 2 தொழிலாளிகள் பலி: சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கிய பரிதாபம்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேந்தர் (25), தயாநிதி (20), சக்திவேல் (30). நண்பர்களான இவர்கள் கட்டிட தொழிலாளர்கள். இவர்கள் ரயிலில் மேட்டுப்பாளையத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதன்படி நள்ளிரவு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் நோக்கி 3 பேரும் பைக்கில் புறப்பட்டனர். வாணியம்பாடி அருகே உள்ள வேப்பமரச்சாலை என்ற இடத்தில் சென்றபோது எதிரே வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் நோக்கி ஒரு கார் வந்தது. எதிர்பாராதவிதமாக கார், இவர்களது பைக் மீது மோதியது. 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

இதை பார்த்து அப்பகுதி மக்கள் ஓடி வந்து 3 பேரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் சுரேந்தர் மற்றும் தயாநிதி ஆகிய இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த சக்திவேலுவை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து சென்று, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்