திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே 4வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பண்ணைக் குட்டையை மூட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். வீட்டின் அருகே இருந்த பண்ணைக் குட்டையில் தவறி விழுந்து 4வயது சிறுவன் கோகுல் உயிரிழந்துள்ளான். பண்ணைக் குட்டையை உடனடியாக மூட திருப்பத்தூர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.