திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சின்னகல்லுபள்ளி பகுதியில் போலி வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யபட்டுள்ளார். மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஆர்.டி.ஓ. எனக்கூறி தனியார் கல்லூரி வாகனத்தை மறித்து சோதனையிட்டுள்ளார். சந்தேகமடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதில் போலி ஆர்.டி.ஓ. என தெரியவந்துள்ளது.