கோவை: வந்தே பாரத் ரயில்கள் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாது தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கூறியுள்ளார். பிரதமர் மோடி தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக வந்தே பாரத் ரயில்களை இயக்குவதில் முனைப்பு காட்டி வருகிறார். செல்வந்தர்கள் பயனடையும் வகையில் அதிக கட்டணத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. கோவை – சென்னை முன்பதிவு இல்லா ரயில் பெட்டிகளில் ரூ.300-க்கு மக்கள் பயணம் செய்தனர் என்று கோவை.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.