17வது வந்தே பாரத் ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: நாட்டின் 17வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் என்ஜினானது தனியாக இல்லாமல் ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.

ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. இவை சென்னையில் உள்ள பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தாயரிக்கப்பட்டது. நாடு முழுவதும் அதிவேக சொகுசு ரயில் சேவையை உறுதிப்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது.

இதுவரை 16 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில். டேராடூனில் இருந்து டெல்லிக்கு தொடங்கி வைக்கப்படுகிறது.இது நாட்டின் 17வது வந்தே பாரத் ரயிலாகும். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விழாவில் பங்கேற்கின்றனர்.

 

Related posts

மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு செப்.27-ம் தேதி முதல் முறைப் பாசனத்தை அமல்படுத்த நீர்வளத்துறை உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு