‘வந்தே பாரத்’ முன் செல்பி ரயில் மோதி தொழிலாளி பலி

கோவை: கோவை ரத்தினபுரி அடுத்த புதுப்பாலம் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகில் கடந்த 18ம் தேதி ஒருவர் ரயில் மோதி பலியாகி கிடந்தார். இந்த வழியாக சென்றவர்கள் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ரத்தினபுரியை சேர்ந்த சிவதாசன் (51) என்பதும், மோட்டார் ரீவைண்டிங் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

இவர் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் வரும்போது தண்டவாளம் அருகே நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது ரயில் மோதி பலியானது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்பி மோகத்தால் தொழிலாளி உயிர் பறிபோனது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

கல்யாண ராணி சத்யாவை ஜாமீனில் விடுவிக்க ஐகோர்ட் ஆணை..!!

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றோர் பிரதமரை மோடியை சந்தித்து வாழ்த்து..!!

கண் திருஷ்டி சரி செய்வதாக பணம் பறிப்பு புகார்..!!