திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பண்டிகை நாட்களில் கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக மோசடி அரங்கேறியுள்ளது. ரூ.1000 கோடிக்கும் மேல் தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களுடன் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.