மேலும், பாரம்பரிய உணவு வகையான கருப்பு கவுனி பாயாசம், முரவாட்டு வாள் கஞ்சி, வாசனை சீரக சம்பா பிரிஞ்சி, ரத்தசாலி அரிசி வகை சாம்பார் சாதம், தூய மல்லி தயிர்சாதம் ஆகிய பாரம்பரிய உணவுகள் சலுகை விலையில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
விழாவில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், இயற்கை விவசாயி ஜெயசந்திரன், பாரம்பரிய அரிசி கூட்டாளர் மேனகா, மரபு விதைகள் மீட்பாளர் பிரியா ராஜ்நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை வேளாண்மையால் ஏற்படும் நம்மைகள் குறித்து விளக்கி கூறினர்.மேலும், சிலம்பாட்டம், 70 கிலோ எடை கொண்ட இளவட்ட கல் தூக்குதல் ஆகியன நடந்தது. இந்த கண்காட்சியில் 4,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.