ஒரு கிலோ எடையை கொண்ட இரண்டு துண்டுகள் மட்டும் ஒப்பந்த பணியாளரால் திருடப்பட்டது. பிறகு அதுவும் மீட்கப்பட்டது. 1000 கிலோ யானை தந்தம் திருடப்பட்டதாக வெளியான செய்தி தவறு என்றார்.இதை கேட்ட நீதிபதிகள், பல ஆண்டுகளாக இந்த யானை தந்தங்கள் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. அவற்றை அழிப்பதற்கான நடைமுறை என்ன என்று கேட்டனர்.இதற்கு காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்த தலைமை வன பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ், யானை தந்தங்களை அழிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை ஒன்றிய அரசு விலக்கிவிட்ட காரணத்தினால், குழு அமைத்து இந்த யானை தந்தங்கள் அழிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானை தந்தங்களை கணக்கிட்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி அழித்து, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.