கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் முழுமையாக வளர்ந்த யானையுடைய தந்தங்கwf இல்லை. ஒரு தந்தம், ஒரு அடிக்கு மேல் அளவுள்ளது எனவும், மற்றொன்று பெண் யானையின் தந்தம் எனவும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றிய சாதாரண ஊழியரான அப்பு (எ) சதீஷ் என்பவரிடம் இருந்து இந்த தந்தங்களை பெற்றதாக பிடிபட்ட 4 பேரும் தெரிவித்தனர். இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஊழியர் சதீஷ், யானைத் தந்தங்களை திருடிச் சென்றிருக்கலாம் என தெரிய வந்தது. விசாரணையில், தொழிலாளி சதீஷ் யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.