வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை தந்தம் திருடிய 4 பேர் கைது

சென்னை: வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்களை அங்கு வேலை செய்து வந்த தற்காலிக பணியாளர் ஒருவர் கடந்த மாதம் 25ம் தேதி திருடியதாக தெரிய வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவினரும், தாம்பரம் வனச்சரக அலுவலகமும் இணைந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி அருகே 4 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் முழுமையாக வளர்ந்த யானையுடைய தந்தங்கwf இல்லை. ஒரு தந்தம், ஒரு அடிக்கு மேல் அளவுள்ளது எனவும், மற்றொன்று பெண் யானையின் தந்தம் எனவும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றிய சாதாரண ஊழியரான அப்பு (எ) சதீஷ் என்பவரிடம் இருந்து இந்த தந்தங்களை பெற்றதாக பிடிபட்ட 4 பேரும் தெரிவித்தனர். இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஊழியர் சதீஷ், யானைத் தந்தங்களை திருடிச் சென்றிருக்கலாம் என தெரிய வந்தது. விசாரணையில், தொழிலாளி சதீஷ் யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

Related posts

கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்: பட்டியலின மக்கள் சாமி தரிசனம்

செப்.28-ல் பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!!

தவறான திசையில் அதிவேகமாக வந்த BMW கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி