சென்னை: விஜயதசமியை முன்னிட்டு வருகிற 24ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு வருகிற 24ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் அறிக்கையில் கூறுகையில், பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை விடுவது வழக்கம். ஆனால், வருகின்ற 24ம் தேதி அன்று விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களின் வசதிக்காக திறந்திருக்கும் என கூறியுள்ளனர்.