மேலும், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மைதானத்தில் வட்டமடித்து புழுதி பறக்க சாகசத்தில் ஈடுபட்டு செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதன்பேரில், செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வாகன பதிவெண் மூலம் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சோழவரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி – சோழவரம் ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு கவுன்சிலர் கனிமொழி ஆகியோரது மகன் நவீன் (19), அபாயகரமாக கார் ஓட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனத்தை இயக்கியதாக நவீனுக்கு போலீசார் ரூ.10 அபராதம் விதித்தனர். அவரது நண்பர்கள் அனைவரையும் எச்சரித்து அனுப்பினர்.