கூடுவாஞ்சேரி: வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா எதிரே தனியார் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தானியங்கி மழை மற்றும் பருவ கால வானிலை மழைமானி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராமன் நேற்று திடீரென வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் விளக்கங்களை கேட்டு அறிந்தார். அப்போது அவருடன் வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா, கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா உட்பட ஏராளமான உடன் இருந்தனர்.