மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் குழித்துறை அருகே மருதங்கோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இரணியல் சர்வோதய சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தியின் உருவ சிலை உள்ளது. இந்த சிலையின் தலை பகுதியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.