அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் குட்டி யானைக்கு உணவு, தண்ணீர் கொடுத்து கண்காணித்தனர். இதற்கிடையே, வனத்துறையினர் டிரோன் மூலம் தாய் யானையை கண்காணித்தனர். இதில் சிறுவனம் பகுதியில் தாய் யானை மேய்ந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில், பெண் குட்டி யானையை மினி லாரியில் ஏற்றி சிறுவனம் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர், லாரியில் இருந்து குட்டியானையை இறக்கிய வனத்துறையினர், அதற்கு தண்ணீர், உணவு கொடுத்து, தாய் யானை இருக்கும் இடத்துக்கு அருகில் கொண்டு சென்றனர். தாய் யானையை பார்த்த உடன் குட்டியானை ஓடி சென்று மகிழ்ச்சியுடன் சேர்ந்தது.