வல்லநாடு பாலம் அருகே வேன், மினிடெம்போ நேருக்குநேர் மோதி விபத்து – 6 பேர் படுகாயம்

நெல்லை : வல்லநாடு பாலம் அருகே வேனும், மினிடெம்போவும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர்கள் சரத்குமார் (22), விக்கி (21), செல்டன் (21), அஜித் (21), ஜாகீர் (23) ஆகிய 5 பேரும் நேற்று குற்றாலத்திற்கு ஆம்னி வேனில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை ஜாகீர் ஓட்டினார். நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், வல்லநாடு ஆற்றுப்பாலம் அருகே பக்கப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வரும்போது வேனும், எதிரே தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி வந்த மினிடெம்போவும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் வேனில் இருந்த சரத்குமார் உள்பட 5 பேரும், மினிடெம்போ டிரைவர் மனோகரனும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் தில்லைநாயகம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்து காரணமாக நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை