கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வள்ளலார் பணியகம், தெய்வ தமிழ் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கட்டடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பார்வதிபுரம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.