வலம்புரி ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம்

 

ஈரோடு, ஏப். 24: ஈரோடு மூலப்பாளையம் ஈபி நகரில் வலம்புரி ராஜகணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.  இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு, மங்கள இசை, விநாயகர் பூஜை, புண்யாஹவாஜனம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. காலை 9.15 மணிக்கு, யாத்ராதான சங்கல்பம், யாகசாலை கடம் புறப்பாடு, கோயில் வலம் வருதல் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடாந்து காலை 11.15 மணிக்கு, விமான கோபுரம் மற்றும் மூலவர் வலம்புரி ராஜகணபதி பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், கோ பூஜை, தசதானம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. அதனைதொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று மூலவரை வழிபட்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு