வாஜ்பாய், அத்வானி பற்றி பேசாத சுயநலமிக்கவர்; மோடியின் சித்து விளையாட்டிற்கு அதிமுகவினர் ஏமாறமாட்டார்கள்: கே.பி.முனுசாமி பொளீர்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை எதிரில் ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

பின்னர் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பிரதமர் மோடி கல்பாக்கத்தில் கட்சி மேடைக்கு வருகிறார். கட்சி மேடைக்கு என்றால் அதற்காக, தனியாக வரவேண்டும். எதையாவது ஒரு அரசு நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு, அரசின் வாயிலாக செலவு செய்துகொண்டு, அரசு நிகழ்ச்சியை பார்வையிட்டுவிட்டு, அடுத்ததாக தன் கட்சியினுடைய தேர்தல் பணிக்காக அந்த மேடைக்கு வர இருக்கிறார். இவ்வளவு சுயநலமிக்க ஒரு தலைவராக நமது பிரதமர் இருக்கிறார்.

நாங்கள் எல்லாம் ஒரு அரசியல் மேடையில் பேசுகிறோம் என்றால், எங்கள் கட்சியினை உருவாக்கியவர்களைப்பற்றி சொல்வோம். எங்கள் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவை பற்றி சொல்வோம். ஆனால், இந்த நாட்டின் பிரதமர், தன்னை வளர்த்து ஆளாக்கிய பாஜ கட்சியை உருவாக்கிய மறைந்த, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி பேசுவதில்லை. அத்வானி பற்றி பேசுவதில்லை. தன்னுடைய கட்சியின் தன் முன்னோர்களை பற்றி பேசாமல், மாற்றுக்கட்சிகள், எதிர்க்கட்சியில் இருக்கின்ற தலைவர்களை பற்றி பேசி, மக்களை ஏமாற்ற வேண்டும் என முயற்சி செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு