சென்னை : பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு அளித்துள்ளார். பட்டியலின, பழங்குடியினர் உள் ஒதுக்கீடுதர மாநில அரசுகளுக்கு அதிகாரம்; தடை இல்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, வரலாற்று சிறப்புள்ள தீர்ப்பை வழங்கியது சமத்துவத்துக்கு வழி வகுக்கும் என்றும் வைகோ கூறினார்.