மோடி ஆட்சிக்கு வந்தபின், இத்திட்டத்தை நிறுத்தும் முயற்சியாக, நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து வருகிறது. 2023-24 பட்ஜெட்டில் வெறும் ரூ.60 ஆயிரம் கோடியை மட்டுமே பாஜ அரசு ஒதுக்கியது. இது எதிர்பார்ப்பை விட 33%குறைவாகும். தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 696 கோடியே 77 லட்சத்தை வழங்காமல் ஒன்றிய அரசு அலைக்கழித்து வருகிறது. இந்நிலையில் ஆதார் இணைப்பு கட்டாயம் என்றால் மாகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் நோக்கம் முழுமையாகச் சீர்குலைந்து விடும். இத்திட்டத்தை படிப்படியாக சிதைத்து வரும் ஒன்றிய பாஜ அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்கு உரியது. ஆதார் இணைப்பு கட்டாயம் என்ற உத்தரவைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.