தோள்பட்டை எலும்பு முறிவு மருத்துவமனையில் வைகோ அனுமதி

சென்னை: தோள்பட்டையில் எலும்பு முறிவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதிமுக குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 25ம் தேதி வைகோ நெல்லை சென்றார்.

பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டுகிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

 

Related posts

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு