சென்னை: வடலூர் வள்ளலார் கோயில் பெருவெளியில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள நிலத்தில் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சைட் பி நிலத்தில் முதியோர் இல்லம், சித்தா மருத்துவமனை கட்டுமான பணிகளை அக். 2வது வாரத்துக்குப் பின் தொடரலாம் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கட்டுமான பணிகள் தொடங்க எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்களை அக்.3-ல் தெரிவிக்க மனுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.