வடசென்னையில் வரும் 10ம் தேதி தேசிய தொழிற் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம்

சென்னை: வடசென்னையில் வரும் 10ம் தேதி தேசிய தொழிற் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் நடக்கிறது. சென்ைன மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், இந்திய அரசு, தென் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ,டி,ஐ, படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது, பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியார்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் வருகிற 10ம் தேதி காலை 9 மணியளவில் வட சென்னை ஆர்.கே,நகர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(வட சென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்) நடைபெற உள்ளது, இதில் அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க உள்ளனர்.

ஐடிஐ படித்து தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற் பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர். தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக குறைந்தபட்சம் ரூ.8000 மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும், இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு, தனியார் தொழிற்பயிற்சிநிலையங்களில் தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in இணைய தளம் முகவரியில் பதிவு செய்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் இம் முகாமில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது