இந்நிலையில், வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட தண்டனைக்கு தி.க. தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார். அதில் போலீஸ், வனத்துறையினரால் பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மன்னிக்கவே முடியாத பெருங்குற்றம். வாச்சாத்தியே கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும்; மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம். அன்றைய அதிமுக அரசு குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றது வருந்தத்தக்கது. இழப்பீடும், நிவாரணமும் பாதிக்கப்பட்டோரின் வலியை குறைக்காது; எனினும் நடந்து முடிந்த நிலையில் இது தவிர்க்க இயலாது. விசாரணையை சரிவர நடத்திய சிபிஐக்கும், வழிகாட்டும் தீர்ப்பை வழங்கிய நீதித்துறைக்கும் உளம் நிறைந்த பாராட்டுகள். பழங்குடி மக்கள் நம் மக்கள் என்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவதே மனிதநேயம். என்று அவர் கூறினார்.