உத்தரப் பிரதேசம்: பிரக்யாராஜில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. சரக்கு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்துக்கு சென்றதால் பரபரப்பு நிலவியது. தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.