டெல்லி: உட்கட்சி பூசல் காரணமாக உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் பூபேந்திர சவுத்ரி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா போர்க்கொடி தூக்கியுள்ளார். துணை முதல்வர் மவுரியா, உ.பி. பாஜக தலைவர் பூபேந்திர சவுத்ரி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். உ.பி. துணை முதல்வர் மவுரியாவை சந்தித்த அமித் ஷா, இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு மேற்கொள்கின்றனர்.