உத்திரமேரூரில் ஜமாபந்தி நிறைவு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று, 117 பயனாளிகளுக்கு ரூ.7.75 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 20ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஜமாபந்தியில் நிறைவுநாளன நேற்று மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் ஜெயவேல், உத்திரமேரூர் வட்டாட்சியர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் தயாளன் அனைவரையும் வரவேற்றார். ஜமாபந்தி துவக்கிய நாள் முதல் கடந்த 8 நாட்களாக, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம மக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ரேஷன் கார்டு, புதிய பட்டா, பட்டா மாற்றம் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1,074 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இதில், 117 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டநிலையில், 117 பயனாளிகளுக்கும் ரூ.7.75 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை