டெல்லி: உத்தரகாசி சுரங்க விபத்து மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார். சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, மருந்து பொருட்கள் வழங்குவது குறித்து பிரதமர் கேட்டறிந்தார். ஒன்றிய அமைப்பு, சர்வதேச வல்லுநர் உதவியுடன் நடக்கும் மீட்புப் பணி பற்றி தெரிவிக்கப்பட்டதாக புஷ்கர் சிங் கூறியுள்ளார். மீட்புப்பணிகள் தொடர்பாக பிரதமரிடம் இருந்து வழிகாட்டுதலை பெறுவதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி பதிவிட்டுள்ளார்.