ருத்ரபிரயாக்: உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கவுரிகந்த் என்ற பகுதியில் நேற்று அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடு ஒன்று மண்ணில் புதைந்தது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 8 வயது குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கவுரிகுந்த் பகுதியில் 5 நாளில் ஏற்படும் இரண்டாவது நிலச்சரிவு சம்பவமாகும்.